• அனுமதிக்கப்படாத கடல் பகுதியில் மீன் பிடிப்பு,13 மீனவர்கள் தடுத்து வைப்பு

      அனுமதிக்கப்படாத கடல் பகுதியில் மீன் பிடிப்பு,13 மீனவர்கள் தடுத்து வைப்பு

      தேசம் செய்திகள் சாரா

      லுமுட், பிப்.20-

      லுமுட் மேற்கு தெலுக் பெலாங்கா 0.5 கிலோ மீட்டர் கடற்ப்பகுதியில் சட்டவிரோதமாக மீன் பிடிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

      மூவர் உள்ளுர் மீனவர்களும் மேலும் 10 இந்தோனேசிய மீனவர்கள் திங்கட்கிழமை மாலை 3.11 மணியளவில் தடுத்து வைக்கப் பட்டதாக கடல் மார்க நிறுவன காப்டன் முகம்ட சுக்ரி கோத்தோப் சொன்னார்.

      24-69 வயதிற்க்குட்பட்ட இவர்களிடமிருந்து 30 கிலோ எடை நெத்திலி மீன்கள் சிக்கியதாக தெரிவித்தார்.

    • ஜெலாப்பாங் சட்டமன்ற‌ உறுப்பினர் சியா பாவ்‌ ஹியான் தீபாவளி வாழ்த்து

      ஈப்போ,அக்.24-
      தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜெலாப்பாங் சட்டமன்ற‌ உறுப்பினர்
      சியா பாவ்‌ ஹியான்
      இந்துக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

      இந்த தீபாவளி அனைவருக்கும் குறிப்பாக இந்துக்களுக்கு நன்மையை கொண்டு வரட்டும். தீபாவளி பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.
      அனைத்து‌ இந்துக்களுக்கும்‌
      இனிய‌ தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்று
      ஜெலாப்பாங் சட்டமன்ற‌ உறுப்பினர்
      சியா பாவ்‌ ஹியான் தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

    • தீபாவளி‌ பண்டிகையை அன்பை‌ பரிமாறி மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள் ஓங் பூன் பியோவ் தீபாவளி வாழ்த்து

      ஈப்போ,அக்.24-
      இந்துக்களின் முதன்மை பண்டிகையாக திகழும் தீபத்திருநாளில் மக்கள் அனைவரும் அன்பை பரிமாறி மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று பெர்ச்சாம் சட்டமன்ற‌ உறுப்பினர் ஓங் பூன் பியோவ் கூறினார்.

      மலேசியர்கள் தீபாவளி பண்டிகையை ஒற்றுமை உணர்வுடன் கொண்டாட வேண்டும். மலேசியர்களாகிய நாம் அனைவரும் வழக்கமாகவே திறந்த இல்ல விருந்துபசரிப்புகளை நடத்தி தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார்கள் என்பதால் இந்த தீபாவளியை பண்டிகையை நாம் மலேசியர்களாக கொண்டாடி ஒற்றுமையை வலுப்படுத்துவோம் என்று கேட்டுக் கொண்ட பெர்ச்சாம் சட்டமன்ற‌ உறுப்பினர் ஓங் பூன் பியோவ். இந்துக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

    Back to top button